அதென்ன
அப்படி
ஒரு பார்வை
சம்மட்டியால்
சட்டென்று
அறைந்தது போல
அதென்ன
அப்படி
ஒரு கோபம்
பசித்தவன்
கையிலிருந்து சோற்றை
பறித்தது போல
அதென்ன
அப்படி
ஒரு தவிப்பு
தப்பிக்க
வழி இல்லா
பறவை போல
அதென்ன
அப்படி
ஒரு அழுகை
வாழ்வின் மொத்த
சோகம்
சேர்ந்தது போல
அதென்ன
அப்படி
ஒரு வெறுப்பு
தெரியாமல்
சேற்றில் கால்
வைத்தது போல
நான் பார்க்க
நீ பார்க்க
நமக்குள்
இருக்குமோ
ஒரு
இம்சையான
உறவு
என்று
நான் வந்து
காதல் சொல்ல
அதென்ன
அப்படி ஒரு
அடி
இனி என்னை
தவிர யாருக்கும்
இதை சொல்லாதே
என்பது போல
No comments:
Post a Comment