Monday, August 3, 2015

காகித பை

ஆச்சர்யமாக இருந்தது 
அந்த அனாதை சிறுமி 
என்னிடம் பிச்சை கேட்கவில்லை.

கையில் வைத்திருந்த
காகித பையை கேட்டாள்...

ஐநூறு ரூபாய் உணவிற்கு  
முன்னூறு ரூபாய் வரி  கொடுத்ததற்கு 
உணவு எடுத்து செல்ல 
என்னக்கு கொடுத்த பை .

அதில் உணவு இல்லை என்றேன்.

பை மட்டும் கொடுங்கள் என்றாள்.

எதற்க்கு கேட்கிறாள் 
என்ற குழப்பம் எனக்கு.

கனவுகள் சேகரிக்கவா 
இல்லை பிச்சை காசு 
போட்டு வைக்கவா.

எதுவாயினும் இரண்டு நாட்களுக்குள் 
கிழிந்துவிடும் அந்த பையை 
ஏன் கேட்கிறாள் .

இருப்பினும் பணம் கேட்டால் 
இல்லை என்றிருக்கலாம் 
உணவு கேட்டல் மறுத்திருக்கலாம் 
பை தானே  தருவதில் 
என்ன தவறு என்று 
தந்துவிட்டேன்.

அதற்க்கு முன் உள்ளிருந்த 
கண்கவர் உணவு பெட்டியை
எடுத்து வைத்துவிட்டு தான்.

பையை கொடுத்தவுடன்  
அவள் அடைந்த சந்தோஷத்தில் 
அவளுக்கு வேண்டியது அந்த பை 
மட்டும் தான் என்பதை உணர்ந்தேன்.

என்னதான் செய்வாள் 
அந்த பையை கொண்டு?

எட்டி பார்த்தேன்,
அந்த உணவு விடுதியின் 
பின்புறம் உள்ள குப்பை 
தொட்டியில் இருந்து 
சரியாக தின்ன படாத 
சிக்கன் துண்டுகளை 
சேகரித்து, அங்கயே 
கிடந்த ஒரு 
கண்கவர் பெட்டியில் போட்டு 
எடுத்து சென்றாள்.

திரும்பி என் பெட்டியை 
பார்த்தேன்.

தரம் கெட்ட மனிதனாய் 
தனித்து நின்றேன்.

No comments:

Post a Comment